பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

மாமன்னர் சுத்தோதனருடைய அரண்மனை விருந்துமண்டபம் கலகலப்பாக இருந்தது. சாக்கிய குலத்தின் வழிவந்த மாவீரர்களும், சுத்தோதன மாமன்னரின் நெருங்கிய உறவினர்களும்தான் அங்கு கூட்டியிருந்தனர். வெளியார் யாருமில்லை.

அன்று விருந்து வைக்க வேண்டும் என்று எவ்விதமான முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. எனவே உணவு வகைகள் சிறப்பாகத் தயாரிக்கப்படவில்லை. எதிர்பாராத விதமாக உறவினர்கள் அன்று கூடினர்கள். அப்போதைக்குச் செய்ய முடிந்த வரையில் உணவுகளைத் தயாரித்து அரண்மனைச் சமையல்காரர்கள் விருந்தை நடத்தி விட்டார்கள்.