பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

72

ஒரு நாள் சித்தார்த்தன் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்குத் தன் குடும்பத்தைப் பற்றிய நினைவு வந்தது. சுத்தோதனரின் அன்பு மிகுந்த முகமும், யசோதரையின் அழகுத் தோற்றமும், ராகுலனுடைய பிஞ்சு உடலும் அவன் கண் முன் தோன்றின. ஆனால், இத் தோற்றங்களெல்லாம், தன் இலட்சியத்தைச் சிதைக்கத் தோன்றிய மாயை உருவங்கள் என்று தனக்குத் தானே கூறி நெஞ்சை வலுப்படுத்திக் கொண்டான். அலைந்து அலைந்து அவன் கால்கள் அலுத்து விட்டன. களைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான்.

அது ஓர் அத்தி மரம்.

அத்தி மரத்தின் அடியில் உட்கார்ந்த சித்தார்த்தன் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டான். "என் உடலுக்கு என்ன நேர்ந்தாலும் சரி. இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன். என் மனத்திற்கு என்று உண்மை புலப்படுகிறதோ அன்று தான் இதை விட்டு நகர்வேன்" என்று சித்தார்த்தன் தன் மனத்திற்குள் உறுதி செய்து கொண்டான்.