பக்கம்:தெய்வ மலர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஆசையோ ஆசை!

ஆசை யாரைத்தான் விட்டது? இந்த உலகத்திலே அத்தனை பேரையும், இந்த ஆசை தான் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

யாருக்கு எப்படிப்பட்ட ஆசை, எந்த நேரத்தில் எவ்வாறு வரும் என்று யாருக்கும் தெரியாது. அப்படித் தெரியாமல் வருகின்ற ஆசை, என்னென்ன துன்பங்களைத் தரும் என்று. ஆசைப்படுவர்களுக்கு முதலில் தெரியாது. அது போகப் போகத்தான் தெரியும். புரியும்,

அந்த பெரிய காட்டிலே வாழ்கின்ற மிருகங்கள் அத்தனைக்கும் அப்படி ஒர் ஆசை வந்து விட்டது. அங்கே பாருங்கள்! எல்லா மிருகங்களும் வேகமாக நடந்து போய்க் கொண்டிருக்கின்றன

உயர்ந்து நிற்கின்ற ஓர் ஆலமரத்தை நோக்கித் தான் நான்கு பக்கங்களிலிருந்தும், அவைகள் போய்க் கொண்டிருக்கின்றன. அங்கே ஓர் உயர்ந்த மேடை இருக்கிறது. அங்கு தான் அவைகள் போய்க் கொண்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/52&oldid=580325" இலிருந்து மீள்விக்கப்பட்டது