பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 35 அன்று உதிர நாற்றம் வீசும் வாளாலும் இன்று - அணுகுண்டுகளாலும் உன்னை வாங்க முடியவில்லை. வைரங்களின் புன்னகை கூட உன்னை அணுக முடியவில்லை. மதுவிடமும் கனவு மாத்திரையிடமும் தன் துன்பத்தை அடகு வைக்கும் பேதை மானிடத்திடங் கூட உன் உருவத்தை நீ காட்டுவதில்லை. வெளிச்சமற்ற இருட்டில் உன் சாயலோ... ஓசையற்ற மெளனத்தில் உன் சுவடுகளோ....