பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 59 சிம்மாசனத்தின் ஆயுளை அதிகரிக்க அப்பாவிகளின் கண்ணிரை பன்னீராய்ப் பூசிய மகுடங்கள் உன் உக்ரமான உதைகளால் நொறுக்கப்பட்டன. வீர வீணைகளில் ரத்த ராகங்கள். மிதந்தன. உனது உஸ்டிணம் சோம்பேறிகளின் கைகளில் கூட எரிமலைகளை பிரதிஷ்டை செய்திருக்கின்றன. 岛 சோதனைக் கூடங்களும் பேராசிரியர்களும் - பாடப் புத்தகங்களும் இல்லாத அதிசயப் பல்கலைக் கழகம். உன்னிலிருந்து இந்த மனித வரிசை கற்றுக் கொள்ளும் கல்வி - கலைகள் கணக்கிலடங்கா.