பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தெற்கு ஜன்னலும் நானும் காவிரித்தாயே! அன்னை என்பவள் நீயன்றோ? ஆரூயிர் அனைத்தின் தாயன்றோ? பொன்னுயர் தியாக வாழ்வுக்கே புவியில் நீதான் முன்னோடி! ஒவ்வொரு உதய விநாடிகளும் உன்றன் பணியின் திருவிழாதான்! திவ்விய பவித்ர அர்ப்பணமே தேவியுன் சில உயிர்முச்சாம்! கொள்வதனைத்தும் கொடுக்கின்றாய்! கொடுப்பதால் களித்தே சிரிக்கின்றாய்! அள்ளிய தனைத்தும் விடுக்கின்றாய்! ஆன்மப் பூவாய் நுரைக்கின்றாய்!