பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13



மெதுவாகக் கனைத்துக்கொண்டு டாக்டர் பேசத் தொடங்கினார்:

"முரளிக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ம் பாங்களே அதுபோல அவனுக்கு ஏற்பட இருந்த ஆபத்து வெறும் கால் எலும்பு முறிவோடு நின்னுடுச்சு. எலும்பு முறிவைச் சரிப்படுத்தி மாவுக்கட்டுப் போட்டிருக்கோம். மயக்கம் தெளிய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். வேண்டுமானால் சற்று தூரத்தில் நின்று பார்த்துவிட்டுச்செல்லுங்கள். யாராவது ஓரிருவர் பக்கத்தில் இருந்தால் போதும். மற்றவர்கள் போகலாம்.

டாக்டர் கூறியதை ஏற்றவர்களாக முரளியைச் சற்று தூரத்தில் பார்த்துவிட்டு அவன் குடும்பத்தார் வெளியேறினார்கள். அவன் மாமா மட்டும் அங்கேயே தங்கிவிட்டார். சேகரும் தயங்கியபடியே அங்கே பெஞ்சியில் அமர்ந்திருந்தான். முரளியின் மயக்கம் தீர்ந்த பின்னர், அவனை நேரில் பார்த்த பிறகே செல்வது எனத் தீர்மான மாக இருந்தான்.

நேரம் செல்லச் செல்ல லேசாக உடல் அசைவு ஏற்பட்டது. பெரிதாக மாவுகட்டுப்