பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



15


பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். நீ ஒரு விளையாட்டு வீரன் என்பதை மறந்து விடாதே!”

இவ்வாறு அவன் மாமா ஆறுதல் கூறி அன்போடு தட்டிக்கொடுத்தார். இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சேகர் மெதுவாக அந்த அறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்தபோது முரளிக்கு மனக் கூச்சம் ஏற்பட்டிருக்க வேண்டும். சேகரின் வருகையை முரளி எதிர்பார்க்கவே இல்லை என்பது அவன் பார்த்த பார்வையிலிருந்து தெரிந்தது. அதிர்ந்த மனத்துடன் சேகரை ஏறிட்டு நோக்கினான் முரளி. தன்னால் சேகருக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய தீங்கு தனக்கே ஏற்பட்டுள்ளதை முரளியால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

மாமா சைகை காட்டி சேகரை அழைத்தார். படுக்கையருகே வந்த சேகர், கனிவோடும் பரிவோடும் முரளியை நோக்கி புன்முறுவல் பூத்தான். தன் கைகளை நீட்டினான். நீட்டிய சேகரின் கரங்களை முரளி, இறுகப் பற்றினான். அவன் பேச நாவெடுத்தான். குரல் தழதழத்தது. ‘என்னை மன்னித்துவிடு சேகர்!" என்று அரைகுறையாகப் பேசி முடித்தான் முரளி. தன் கைகளால் முரளியின் வாயை லேசாகப் பொத்தியபடி "முரளி! நீ எந்தத் தவறும் செய்ய