பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16


வில்லை. எதேச்சையாக நடந்து விட்ட விபத்துக்கு யாரும் பொறுப்பில்லை. பேரபாயம் ஏதும் ஏற்படாமல் காத்த கடவுளுக்குத் தான் நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்” என ஆறுதல் வார்த்தைகளைப் பேசினான்.

சேகருக்கு இதே விதமான விபத்தை ஏற்படுத்த முனைந்த ரகசியம் முரளிக்கும், ஆட்டத்தின் போக்கை கூர்ந்து கவனித்துக் கொண் டிருந்த அவன் மாமாவுக்கும் மட்டுமே தெரியும். விளையாட்டு வேகத்தில் சேகருக்கு அது சரியாகப் புரியாததில் வியப்பில்லை. தன் முரட்டுத்தனமான போக்கும் தவறான எண்ணமும் தனக்கே தண்டனையாக அமைந்து விட்டதை முரளி உணரவே செய்தான். 'நினைக்கும் கெடுதி தனக்கே’ என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பது மின்னல் வெட்டுப் போல் அவன் மனதில் பளிச்சிட்டு மறைந்தது.

தன் தவறுக்காக வருந்தும் மனநிலையிலிருந்த முரளியின் மனதில்சில நல்ல உணர்வுகளையும் நெறிகளையும் நிலை நிறுத்த இது தான் சரியான தருணம் எனக் கருதினார் மாமா. அதன் மூலம் முரளியின் உள்ளத்தில் குடி கொண்டுள்ள முரட்டுச் சுபாவத்தைப் போக்க விரும்பினார். ஆத்திரமும் அடாவடித்தனமும்