மாமா அந்த உருவகக் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
***
இரண்டு உழவர்கள் பக்கத்துப் பக்கத்து வயல்களை உழுது கொண்டிருந்தார்கள். ஒரு உழவன் மிகவும் பொறுமையாகக் காட்சியளித்தான். அன்புணர்வு மிக்கவன்; மிகுந்த நிதானப் பொக்குள்ளவன்; எதையும் முறையாகச் செய்ய வேண்டும், அப்போதுதான் வெற்றியும் முறையானதாக இருக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவன்.
பக்கத்து வயலை உழுது கொண்டிருந்த உழவனோ இதற்கெல்லாம் நேர்மாறான தன்மையுள்ளவன். இப்படித்தான் செய்ய வேண்டும்' என்பதெல்லாம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று. ‘எப்படியாவது வெற்றிபெற வேண்டும்’ எனும் கொள்கையுடையவன். இதற்காக பொறுமை அது இது என்று எந்த முறையையும் கடைப் பிடிக்க விரும்பாதவன் இன்னும் சொல்லப் போனால் பொறுமை உணர்ச்சி அறவே இல்லாதவன்.
இந்த நிலையில் காலை நேரத்தில் இருவரும் ஏர்பூட்டி நிலத்தை உழத் தொடங்கினர். வெயில் ஏறிக்கொண்டே வந்தது, மதியம் ஆகியது.