பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22


"இந்தக் கதையில் வரும் உழவர்கள் ரெண்டு பேருமே தனித்தனி மனப்போக்கு உள்ளவங்க. ரெண்டு பேர்லே முறையாகவும் பொறுமையாகவும் மன அமைதியோடும் உழுதவன் சிறந்தவன்; மனிதத் தன்மை மிகுந்தவன்; அவனுக்கு மதிப்பு அதிகம்; வெற்றியும் உறுதி. இத்தகையவர்களே எப்பவும் எதிலும் வெற்றி பெறுவார்கள்; புகழை நிலைநிறுத்துவார்கள்: மற்றவர்களின் போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆவார்கள்.”

மாமா கூரிய விளக்கம் சேகருக்கு மட்டுமல்ல, முரளிக்கு இதய நோய்க்கு ஏற்ற மாமருந்தாக அமைந்தது. இனி எந்த நிலையிலும் பொறாமையோ ஆத்திரமோ முரட்டுத்தனமோ கொள்வதில்லை என உள்ளத்தில் உறுதி செய்து கொண்டான். அவன் உறுதியை முகக் குறிப்பால் உணர்ந்து கொண்ட மாமா அவன் சிந்தனையை வேறு வழியில் செலுத்த முயற்சி மேற்கொண்டார்.

"எல்லாவித எண்ணங்களுக்கும் உறைவிடமாக உள்ளம் அமைந்திருப்பதால் அதை வளர்க்க, வளப்படுத்த ஒவ்வொருவரும் முயற்சி செய்யனும். நல்ல உள்ளங்கள் கூட தீயவர்களின் உறவால் கெட்டுவிட முடியும். இதனால் தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்களைச் சார்ந்த மற்றவர்களுக்கும் பெருந்தீங்கு ஏற்பட ஏதுவாகி