பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23


விடும். உயிருக்குயிரான நட்பையே நாசப் படுத்திவிடும். இதை விளங்கிக் கொள்ள ஒரு சின்ன கதை சொல்கிறேன். உங்கள் ரெண்டு பேருக்குமே பயன்படும்” எனச் சொல்லி கதை கூறத் தொடங்கினார்.

மாமா மீண்டும் கதைகூற முனைவதை இருவருமே வரவேற்றனர். தன் கால் வேதனையை மறப்பதோடு மனப்புண்ணுக்கு மருந்தாகவும் மாமா கூறும் கதை அமையும் என முரளி நம்பி னான். மாமாவின் அனுபவப்பூர்வமான, அறிவு சார்ந்த கதைகள் மூலம் பல புதிய புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வேட்கையுடன் சேகரும் கதை கேட்கத் தயாரானான். மாமா கதையைத் தொடங்கினார்.

***

அடுத்தடுத்து இருந்த இரண்டு கிராமத் தலைவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஒருவரையொருவர் உயிருக்குயிராக நேசித்தனர். ஈருடல் ஒருயிர் என வாழ்ந்தனர். வேதனையிலும் சோதனையிலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொண்டனர். இதனால் இரண்டு கிராம மக்களும் குறை ஏதும் இல்லாமல் நிறைவாக வாழ்ந்தார்கள்.