பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



24


இந்த நண்பர்களில் ஒருவர் கருத்த மயிரை உடையவராக இருந்ததால் கருந்தலையர் என அழைக்கப்பட்டார். மற்றொருவர் தலைமுடி செம்பட்டையாக இருந்ததால் ‘செந்தலையர்’ என அழைக்கப்பட்டனர். இருவருக்குமே இயற்பெயர் இருப்பினும் இப்பட்டப் பெயராலேயே மக்கள் அழைத்துவந்தனர். நாளடைவில் இதுவே இவர்களின் பெயராகவும் அமைந்து விட்டது.

ஒருநாள் கருந்தலையரின் கிராமத்தில் சுழற்காற்று சூறாவளிக் காற்றாக சுழன்று சுழன்று அடித்தது, இதனால் சில மரங்களும் பல மரக் கிளைகளும் ஒடிந்து விழுந்துவிட்டன. விழுந்து விட்ட இம்மரங்களை என்ன செய்வது என்று கருந்தலையர் ஆலோசித்தார். அவரது வேலையாட்களில் ஒருவன் முறிந்து விழுந்துள்ள மரங்களைக் கழிகளாக வெட்டி எடுத்து கோழிக் கூண்டு செய்யலாம் என்றும், கோழி வளர்க்க உதவும் என்று ஆலோசனை கூறினான். இந்த யோசனை மிகவும் பிடித்துப்போய்விட்டதால், அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டார்.

வேலையாட்கள் விரைந்து சென்று புயலில் விழுந்து கிடந்த மரங்களையெல்லாம் சேகரித்தார்கள். அவைகளை கழிகளாக வெட்டிக் குவித்தார்கள்.பின், கட்டுகளாகக் கட்டினார்கள்.