பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



26


கள் கூறியதில் உண்மை இருக்கலாம் என்று நம்பினார். அதோடு, எதிரி தாக்கினால் அதை முறியடிக்கத் தானும் தயாராக இருக்கவேண்டும் எனக் கருதினார். எனவே, தன் கிராமத்திலுள்ள மரங்களையெல்லாம் வெட்டி, கழிகளைச் சேகரிக்குமாறு உத்திரவிட்டார்.

செந்தலையரின் கிராமத்திலுள்ள மரங்களெல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டன. அவை கழிகளாக வெட்டிச் சேகரிக்கப்பட்டன. கட்டுகளாகக் கட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.

இதைக் கண்ட கருந்தலையருக்கு வியப்பாக இருந்தது. 'தன் கிராமத்து மரங்கள் புயலால் விழுந்ததால் கோழிக் கூண்டு கட்ட கழிகளாக்கினோம். புயலேதும் அடிக்காதபோது, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி செந்தலையர் ஏன் கழிகளாக்கிச் சேமிக்க வேண்டும்’ என்று எண்ணினார். தன்னோடு இருந்தவர்களிடம் இதைப்பற்றி கருந்தலையர் ஆலோசித்தார். செந்தலையரின் ஆட்களுக்கு ஏற்பட்ட அதே ஐயம், பயம் கருந்தலையர் ஆட்களுக்கும் ஏற்பட்டது. கழிகளைச் சேகரித்துப் போருக்குத் தயாராகி வரும் செந்தலையரின் தாக்குதலை எதிர்த்து முறியடிக்க நாமும் வேண்டிய அளவு கழிகளை உடனடியாகச் சேகரித்தே தீரவேண்டும் எனக் கூறி, போர் உணர்ச்சியைத் தூண்டி விட்டனர். உடனே கருந்தலையர் தன் கிராமத்