பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



27


திலுள்ள எல்லா மரங்களையும் உடனடியாக வெட்டி கழிகளாகச் சேகரிக்கப் பணித்தார். எந்த நேரமும் செந்தலையர் தாக்க முனையலாம் என்றும அதனை எதிர்க்கத் தன் கிராம்த்து ஆட்கள் எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்றும் ஆணையிட்டார்.

ஒருசில நாட்களுக்குள் இரண்டு ஊர்களிலுமுள்ள மரங்கள் அனைத்தும் வெட்டி வீழ்த்தப் பட்டன. அவை கழிகளாக உருமாற்றி, கட்டுகளாகக் கட்டி அடுக்கி வைக்கப்பட்டன. எந்த நேரமும் சண்டை மூளலாம் என்ற அச்ச உணர்வு இரு கிராமத்து மக்களையும் கவ்விக் கொண்டது. பல்வேறு வகையான போர் ஆயுதங்களையும் வாங்கிச் சேகரிக்கலாயினர்.

இரு கிராமத்துத் தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வசமிருந்த பொருள்களையெல்லாம் விற்று, பணமாக்கி ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர். இரண்டு கிராமங்களும் கடும் பகையாளி கிராமங்களாக உருவெடுத்து நின்றன.

மரங்களெல்லாம் வெட்டப்பட்டதால் பசுமையே இல்லாத வரட்சி நிலை ஏற்பட்டது. மழை அடியோடு பொய்த்துவிட்டது. அதனால் உணவுப் பொருள் விளைச்சல் நாளடைவில் குறைந்து கொண்டே வந்தது. இறுதியில் எது