பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



29


ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு முதுமை தங்களை உரு மாற்றிவிட்டதை உணர்ந்தார்கள். தாங்கள் நண்பர்களாக விளங்கிய பசுமையான நாட்களை ஒரு கணம் நினைத்துக் கொண்டார்கள். தாங்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு, ஒருவர் மீது ஒருவர் சந்தேகமும் அச்சமும் கொண்டதால் தாங்கள் அறியாமலே ஏற்பட்ட பகைமையையும் நினைத்துப் பார்த்தார்க்ள். தங்கள் கிராம மக்களை வறுமையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் காப்பது தங்கள் கடமை என்பதை அறவே மறந்து, தங்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் கிராமங்களையும் கிராம மக்களையும் சீரழித்துவிட்டதை உணர்ந்து வருந்தினார்கள். இளமை தொட்டுத் தங்களுக்கிடையே நிலவிய அன்பும் பாசமும் நேசமும் அவர்கள் மனதில் மீண்டும் தலைதுாக்கின. தங்களுக்கிடையே எப்படி பகை வளர்ந்தது? வளர்க்கப்பட்டது? மாற்றாரின் கைப் பாவையாகத் தாங்கள் மாறியதால் எப்படி தம் மக்களின் வாழ்வு சிதைந்தது? அவநம்பிக்கையும் குரோதமும் அழிவுக்கு வழியாய் அமைந் திருப்பதை எல்லாம் ஒரு கணம் எண்ணிப் பார்த்தார்கள். அவர்கள் மனம் வேதனையால் துடித்தது. இறுதியில் அவர்களின் அடிமனத்தில் உறங்கிக் கொண்டிருந்த பாசமும் நேசமும் தலைதுாக்கியது. இருவரும் ஓடி வந்து ஒருவரை