பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



30


யொருவர் தழுவிக்கொண்டனர். அவர்கள் கண்கள் நீரைச் சொரிந்தன.

காரணம் இல்லாமல் ஏற்படும் சந்தேகமும் அச்சமும் எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டி வைக்கிறது என்பதற்கு இந்தக் கதையே சான்றாகும். தாங்கள் மட்டுமல்லாது தங்களைச் சார்ந்தவர்களும் எப்படியெல்லாம் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதற்கு பாழ்பட்டுப் போன இரு கிராம மக்களின் வாழ்க்கையே உதாரணம். எனவே, வாழ்க்கையாகட்டும், விளையாட்டு ஆகட்டும் ஒருவர் மற்றவர் மீது வீண் சந்தேகமும் அச்சமும் கொள்ளுதல் கூடாது. மாற்றாரின் திறமையைப் பாராட்டும் பண்பு வளரவேண்டும், முறையாகவும் பொறுமையாகவும் செயல்பட்டால் வெற்றி தானே காலடியை வந்து சேரும். இல்லையேல் இன்னலும் துயரும் தொடரவே செய்யும் எனச் சொல்லி முடித்தார் மாமா.

***

அமைதியாகக் கதையைக் கேட்டுவந்த முரளியும் சேகரும் ஆழ்ந்த சிந்தனைக்கு ஆளானார்கள். பொறுமை இல்லாது, முறையாக உழாது, பொறாமை கொண்டு மற்றவனைக் கொல்ல முனைந்து, தன்னையே பலியாக்கிக் கொண்ட உழவன் முரளியின் கண்முன்னே காட்சி தந்தான். தன் நிலைக்காக வேதனைப்