பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



31


பட்டான். அவன் வேதனை கண்ணிராகப் பெருக்கெடுத்தது.

காரணம் இல்லாமல் சேகர் விளையாட்டில் ஜெயித்து விடுவானோ என்ற சந்தேகமும் அச்சமும் ஏற்பட, தான் முரட்டுத்தனமாக சேகருக்குத் தீங்கு செய்யப் போக, அதனால் தான் மட்டுமல்லாது தன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளதை ஒரு கணம் நினைத்தபோது அவன் நெஞ்சம் வேதனையால் விம்பித் துடித்தது. இனி, ஒருக்காலும் இத்தகைய இழி நிலைக்கு ஆளாகமாட்டேன் எனத் தனக்குள் முரளி உறுதி செய்து கொள்வதை அவன் முக உணர்ச்சிப் புலப்படுத்திக் கொண்டிருந்தது.

இதையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் போல் மாமா முரளியை புன்முறுவலோடு கனிவாகப் பார்த்தார். இருவர் முகத்திலும் ஏற்படும் மலர்ச்சியை மாறிமாறிப் பார்த்து மகிழ்ந்தவனாக சேகர் நின்று கொண்டிருந்தான்.

மூவரிடையே நிலவிய அமைதியைக் குலைத்தது நர்சும் வருகை. வந்ததும் வராததுமாக முரளியைச் `செக்அப்' செய்ய டாக்டர் வருகிறார். நீங்கள் இருவரும் சற்றே அறையை விட்டு வெளியேறுங்கள்' என்று அறிவிப்புச்செய்தாள். மாமா வெளியே செல்ல எழுந்தார். சேகர்