பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



32


வாஞ்சையோடு முரளியின் கைகளைப் பற்றினான். எந்த சேகருக்கு தீங்கிழைக்க முயன்றானோ அதே சேகர் தான் நலமடைய காலை முதல் காத்திருந்து அன்பு காட்டிய தகைமையை எண்ணியபோது முரளியின் மனம் வெட்கத்தாலும் வேதனையாலும் துடித்தது. சேகர் நீட்டிய கரங்களை இறுகப்பற்றி முத்தமிட்டான். முத்தமிட்ட சேகரின் கரங்கள் முரளியின் கண்ணீரால் நனைந்தன. அதில் முரளியின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த முரட்டுத்தனம், மூர்க்க குணம், "தான்’ என்ற அகந்தை ஆகிய எல்லாமே கரைந்தன.

-----------