பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ல் வி 9 கொள்ளலாமே! அப்படியிருந்தும் விலங்கு வாழ்க்கை வாழ்கின்றனரே! இனியாயினும் உணர்ந்து திருந்துவார் களாக'- என்றெல்லாம் சுட்டிக்காட்டி எச்சரிக்க விரும் பியவர்போல் மாந்தர்க்கு ஊறும் அறிவு' என்ருர் ஆசிரியர் வள்ளுவனர். இதற்கேற்பவே உவமையினையும் அமைக் துக் கொண்டார். அதாவது கேணி என்று கூறியுள்ளார். கேணி என்ருல், சிமிட்டியால் கட்டப்பட்ட சின்ன (Tank) நீர்நிலைத் தொட்டியா? கீழே தோண்டப்பட்ட சின்ன குளம்-அல்லது-பெரிய கிணறுதான் கேணி என் பது. அதிலும் பாறையிலோ, கட்டாந்தரையிலோ தோண் டப்பட்ட கேணியா? இல்லை; மணலிலே தோண்டப்பட்ட கேணி. அந்த மணற்கேணியிலே நீர் ஊறச் சொல்லவா வேண்டும்? அதுபோல, உயர்திணையாகிய மாந்தர்க்கு அறிவு ஊறக் கேட்கவா வேண்டும்? என்று மாந்தர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கியுள்ளார் ஆசிரியர். 'கற்றனைத் தாறும் அறிவு என்ற கருத்தின் வாடை, 'தான் கற்ற நாலளவே யாகுமாம் நுண்ணறிவு என்னும் ஒளவையின் மூதுரையிலும் வீசுகின்ற தன்ருே? இந்த துண்ணறிவைப் பற்றி, ஆங்கில மன நூல் அறிஞரான ஸ்பியர்மன் (Spearma) என்பவர் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் குறிப்பிடத் தக்கவை யாகும். 6. சாந்துணையுங் கற்க! (தெளிவுரை) கல்வி யுடையவனுக்கு எந்தநாடும் சாந்தநாடாகுமாதலாலும், எந்த ஊரும் சொந்த ஊராகு மாகையாலும் ஒருவன் சாகும்வரை அவ்வுயர்ந்த கல்வி யைக் கற்காததற்குக் காரணம். என்ன! - “யாதானு நாடாமா லுராமா லென்னுெருவன் சாந்துணையுங் கல்லாத வாறு' (பதவுரை) யாதானும் காடாமால் = கற்றவனுக்கு) எந்தநாடும் தன் நாடாகு மாதலானும், (யாதானும்) ஊாா மால் = எந்த ஊரும் தன் ஊராகு மாத்லானும், ஒருவன் சாம்துணையும் கல்லாதவாறு என் = (அத்தகைய உயர்