பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பொருட்பால் வளிக்கும் கல்வியை) ஒருவன் சாகும் வரையும் படிக்காமல் இருப்பது என் ? - - (யாதானும் = எதுவாயினும் - எந்த நாடும்- எங்க ஊரும்; என்=என்ன-என்ன காரணம் சாம் துணையும் -சாகும் துணையும்; துணை= இங்கே கால அளவு) (மணக்குடவருரை) யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம்; ஆதலால் ஒருவன் சாந்தனையுங் கல்லா தொழுகுதல் யாதிக்னக் கருதி: (பரிமேலழகருரை) கற்றவனுக்குத் தன்னடுத் தன்னு ருமே யன்றி யாதானு மொரு நாடும் நாடாம்: யாதானுமோ ருரும் ஊராம்; இங்கனமாயின் ஒருவன் தானிறக்கு மளவுங் கல்லாது கழிகின்றது என் கருதி: (ஆராய்ச்சியுரை) வள்ளுவர்க்குச் சினம் வந்து விட்ட தாக இந்தக் குறளிலிருந்து தெரிகிறது. படிக்காதவனே அவரால் மன்னிக்க முடியவில்லை. ஏன் அவன் படிக்க வில்லை என்று கேட்கிருர், படிப்பினல் அவனுக்கு நன் மையே தவிாத் தீங்கொன்று மில்லை என்று கூறுகிரு.ர். நன்மை யென்ருல் சிறிய நன்மையா? அங்கிங் கெதைபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைப்போல, படித்தவன் எங்கும் திகழலாம் என இனிப்புக் காட்டுகிருர், சிலர்க்கு இந்தக் குறளின் கருத்துப் புரிந்து செரிமா னம் ஆவது அருமை. என்ன படித்துவிட்டால் எந்த நாட்டுக்கும் போகலாமாம்- எந்த ஊருக்கும் போகலாமாம். இஃதென்ன விந்தை எல்லா நாட்டுக்கும் எல்லா ஊருக் கும் படிப்பிருந்தால்தான் போகமுடியுமா? ஏன், பணமிருந் தால் எந்த நாட்டுக்கும்-எந்த ஊருக்கும் போகமுடியாதா? எங்கே செல்லினும் கிரம்பப் பணம் கொடுப்பவனுக்கு முதல் வகுப்பும் முதல் மதிப்பும் கிடைக்குமா? அல்லது நிரம்பப் படித்தவனுக்குக் கிடைக்குமா? இஃதென்ன சிக்கல்? பணக்காரன் பணத்தைச் செலவழித்துப் பெறுகின்ற நன்மைகளை யெல்லாம், படித்தவன் பணமின்றியே பெற்று விடுவான். அதுவும் உலகத்தார் தாங்களாகவே படித்தவனே வலியத் தேடியழைத்துச் சிறப்புச் செய்வர். இஃது, அந்தக் காலப் புலவர் பெருமக்களிலிருந்து இந்தக் கால ஆராய்ச்சி