பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 9

வாழும் புலி இனமும் உடலமைப்பில் ஒத்துத் தெரி கின்றனவே! . -

நான்கு கால்களைக் கொண்ட மிருகங்கள், காலத்தால் வளர்ந்து, மாறி மாறி கைகளுக்குப் பதிலாக் சிறகுகளைப் பெற்றன என்றும், மிருகங்களிடையே புத்துணர்ச்சி பெற்ற விதமாகக் குரங்குகளாக உருமாறி வந்து, அவற்றிலிருந்து ஆறறிவு படைத்த மனித இனம் அழகுற உருவானது என்பதும் உலகில் ஆச்சரியமான அமைப்புதான். அதிசயமான வளர்ச்சிதான். - - -

மிருகங்களின் கால்கள் இரண்டு, பறவைகளுக்கு சிறகாக மாறி வந்தது போல, சிறகுகள் இரண்டும் பிற்காலத்தில் மனிதர்களுக்கான கைகளாக மாறி வந்திருக்கலாம் என்பதற்கு, சிறகுகளின் எலும் பு அமைப்பும், மனிதக் கைகளிலுள்ள எலும்பு அமைப்பும் ஒற்றுமை கொண்டிருப் பதை நம்மால் பார்த்துஉணர்ந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு சில ஒற்றுமைகளுடன், வேற்றுமைகளும் சேர்ந்து, கலந்து, படிப்படியர்க, பக்குவமான வளர்ச்சியை ஏற்று, பெரிய மாற்றத்தைப் பெற்று, தற்கால உயிரினங்களாக, தேர்ச்சி மிக்கதாக வளர்ச்சியடைந்திருக்கின்றன என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன. கருவும் உருவும் - -

ஒர் உயிர் தோன்றுவதற்கு உரிய உன்னதமான இடமாக விளங்குவது கரு என்பது எல்லோரும் அறிந்ததே எல்லா உயிரின்ங்களிலும் உள்ள ஆண் அணுவும், பெண் அணுவும் உறவின் காரணமாக இணைந்து கொள்ள நேர்கிறபோது, கரு உண்டாகி, வளர்ச்சி பெற்றுக் கொள்கிறது.

அப்படி வளரும் கருவானது அந்தந்த இனத்திற்கு ஏற்றவாறு, பல மாற்றங்களைப் பெற்று, அதே போன்ற உடலமைப்பை உருவாக்கித் தந்து விடுகிறது.