பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எலும்புக் கூட்டினால் ஏற்படும் நன்மைகள்

1. மனித உடலுக்கு எலும்புக் கூடானது உருவத்தையும், உன்னதமான வடிவத்தையும் அளிக்கிறது. -

2. உறுதியான உடலமைப் பும், உறுதியான எலும் பு களினால்தான் ஏற்படுகிறது.

3. எலும்புகள் எல்லாத் தசைகளுடனும் இணைந்து, ஒர் இயக்கக் கருவியாகப் பணிபுரிகிறது.

4. உடலின் மிக முக்கியமான அங்கங்களாக விளங்கும் மூளை, இருதயம், நுரையீரல், தண்டுவடம் போன்றவற்றின் பத்திரமான பாதுகாப்புக்கும், எலும்புக்கூடு உதவுகிறது. உதாரணமாக, மண்டையோடு மூளையைப் பாதுகாக்கிறது. மார்புக் கூடு இருதயத்தையும், நுரையீரல்களையும் பாதுகாக்கின்றது. இடுப்பு எலும் புக்கூடு சிறு நீர்ப்பை, மலக்குடல் முதலியவற்றைப் பாதுகாக்கிறது.

5. இரத்தத்தின் சிறப்பு அணுக்களாக விளங்கும் சிவப்பு

இரத்த அணுக்கள், எலும்புகளின் மூட்டில் உள்ள எலும்புச் சோற்றிலிருந்து தான் உற்பத்தியாகின்றன.

6. எலும் புக் கூட்டின் மூட்டுகளும், இணைப்புகளும் நமக்கு நிற்கவும், நடக்கவும், ஒடவும், நன்கு செயல்படவும் உதவுகின்றன. =

ஆகவே, எலும்புக் கூடு உடலுக்கு ஆதாரமாகவும், அழகான இயக்கத்திற்கும், பெருமைக்குரிய பாதுகாப்பினைத் தருதல் போன்ற பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது. எலும்பு கூட்டின் அமைப்பு -

மனித உடலில் 200க்கு மேற்பட்ட எலும்புகள் உள்ளன.

மனித எலும்புக் கூட்டை நாம் கீழ்க்கண்டவாறு பிரித்து விளக்கமாகத் தெரிந்து கொள்வோம்.