பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அவர்கள் அனைவரும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். வேறு பாடற்றவர்கள், ஒரு தேசிய இனத்தைச் சேர்த்தவர்கள் என்ற கருத்தையெல்லாம் நம் மனத்தில் பதியுமாறு பாடிச் செல்கின்றார்.

பன்னெடுங்காலம் பெரிய புராணத்தில் ஊறி, திளைத்து பேசி, வாழ்ந்த என் தந்தையார் இளமையிலேயே பெரிய புராணச் சுவையை எனக்கு ஊட்டத் தொடங்கினார். அதன் பயனாக மிக இளமைக் காலந்தொட்டே இந் நூலினுள் திளைக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். புத்தம் புதிய கருத்துகள் என்று இக்காலத்தில் போற்றப்பெறுகின்ற பல் வேறு கருத்துக்கள் பெரிய புராணத்தில் இடம்பெற்றிருப்பதை பல்லாண்டுகளாகத் தமிழ் மக்கள் வாழும் இடமெல்லாம் சென்று பறையறைவித்த என் தந்தையார் திருவாளர் சரவண் முதலியார் அவர்கள் பெரி புராணத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டுக்கு ஒர் அடையாளமாகும் இந் நூல். புதிய புதிய அல்லல்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சமுதாயம் பெரிய புராணத்தைக் கற்பதன்மூலம் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ முற்படுமென்று நம்புகிறேன்.

பெரிய புராணம் குறித்த மேலும் பல Saraiaಣ67 இந்நூலாசிரியனது "பெரிய புராணம்து - ஒர் ஆய்வு" என்ற நூலில் காணலாம்.

தேசியம் என்பதே சரி. தேசீயம் என்பது பிழை. இந்நூலில் முதற்பக்கத்திலும் . 20ஆம் பக்கத்திலும் பிற பக்கங்களின் தலைப்பிலும், "தேசீய" என நேர்த்த பிழை திருத்தம் பெறத்தக்கன.

அ. ச. ஞானசம்பந்தன்