பக்கம்:தேடி வந்த குயில்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தேடிவந்த குயில்


நாட்டில் மூட நம்பிக்கை எந்த அளவுக்குக் கோபுரமாக வளர்ந்துவிட்டது என்று எண்ணிப் புழுங்கிய தன்மான உள்ளத்திலிருந்து வெடித்துக் கிளம்பிய இந்த வரிகளைப் புரட்சிக் கவிஞர் எழுதாவிட்டாலும், அவர் எழுதியதாகவே நாடு நம்பிக் கொண்டிருக்கிறது. இப்படி எத்தனையோ இளம் உள்ளங்களில் வீரத்தைப் புரட்சியை - தன்மான எண்ணத்தை - அஞ்சாமையை விதைப்பதற்கு மூலமாக இருப்பவை புரட்சிக் கவிஞரின் பாடல்கள்தாம்! - நாடு விடுதலையுற்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலா கியும், தமிழ்நாட்டில் தமிழ் இல்லை; தமிழால் முடியுமா என்று கேட்கும் ஆட்கள்தான் இருக்கிறார்கள், இவர்கள் தமிழுக்கு வந்த நோயாக இருக்கிறார்கள், இந்த நிலைமாற ஆயிரமாயிரம் புரட்சிக் கவிஞர்கள் தோன்ற வேண்டும்! புரட்சிக் கவிஞர் தொடங்கிய தமிழியக்கம் வளர்ந்தோங்க வேண்டும். தமிழியக்கம் என்ற நூலிலே முடிவாக ஒரு கட்டளையைப் புரட்சிக் கவிஞர் தமிழ் இளைஞர் சமுதாயத்திற்குப் பிறப்பித் திருக்கிறார். அந்தக் கட்டளையைப் பின்பற்றினால் தமிழ் மீண்டும் அரியணை ஏற முடியும். அந்தக்கட்டளை இதுதான். விழிப்போரே நிலைகாண்பார் விதைப்போரே அறுத்திடுவார் களை காண்டோறும் அழிப்போரே அறஞ்செய்வார் அறிந்தோரே உயர்ந்திடுவார் ஆதல் ஆர்வம் செழிப்போரே,இளைஞர்களே தென்னாட்டுச் சிங்கங்காள் எழுக! நம் தாய் மொழிப் போரே வேண்டுவது தொடக்கம் செய்வீர்! வெல்வீர்! மொழிப்போர் வெல்க! -பாரதிதாசன்