பக்கம்:தேன்பாகு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


பெரிய மாளிகை கட்டிக்கொண்டு நாகரிக வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். நிலங்களைக் குத்தகைக் காரர்களிடமும் காரியஸ்தர்களிடமும் விட்டுவிட்டு நகர வாழ்க்கையின் கோலாகலத். திலே நீந்தி விளையாடினார்,

அவருக்கு ஒரு பிள்ளை. அவன் காலேஜில் படித்தான்; பிறகு சீம்மைக்குப் படிக்கப் போனான். இந்தியாவில் இருந்த போது இந்நாட்டைப் பற்றி அவன் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. சீமைக்குப் போன பிறகு அங்கே ஏற்பட்ட நண்பர்களின் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் திண்டாடினான். இந்தியாவைப் பற்றிய சில: புத்தகங்களைச் சீமையில் படித்தான்! இந்தியா விவசாய நாடு என்று அந்தப் புத்தகங்களின் மூலம் தெரிந்து கொண்டான். "பல காணிகளைப் படைத்த பணக்காரர்கள் சொந்த ஊரை விட்டு நகர வாழ்க்கையில் உள்ள மோகத்தால் நகருக்கு வந்து விடுகிறார்கள். கிராமத்திலோ நிலங்களை கூலிக்காரர்களும் குத்தகைக்காரர்களும் பார்க் கிறார்கள். இதனால் நிலம் சீர்குன்றி வளம் மங்கிப் போகிறது" என்று யாரோ புண்ணியவான் எழுதியிருந்தார், இந்த வாக்கியம் செல்வக் குமரன் உள்ளத்திலே தைத்தது. தன் தங்தை யாரும் நகர வாழ்க்கையில் மோகம் கொண்ட வரென்பதை உணர்ந்தான்.

ஒரு விதமாகச் சீமைப்படிப்பு முடிந்தது. தாய்நாட்டுக்குப் போனவுடன், முதல் வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/12&oldid=1261009" இலிருந்து மீள்விக்கப்பட்டது