பக்கம்:தேன்பாகு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


குளிக்கிறார்களா? யார் உண்மையான நம்பிக்கையுடன் நீராடுகிறார்களோ, அவர்களுக்குத்தான் கைலாசம் கிடைக்கும்' என்றுசொன்னார். "அதை உனக்குக் காட்டுகிறேன் வா, நாம் இருவரும் கிழவன் கிழவியைப்போல அங்கே போய் ஒரு திருவிளையாடல் பண்ணலாம்" என்றார்.

அப்படியே அவ்விருவரும் கிழவன் கிழவி யாகக் கங்கைக்கரைக்கு வந்தார்கள், நீராடினாாகள். அப்போது கிழவர் நீரோடு போய் விட்டார். கிழவியாக வந்த பார்வதி, "ஐயோ! யாராவது என் கணவரை மீட்கமாட்டிர்களா?" என்று கதறினாள்.

ஒருவர், "இதோ நான் நீந்திப்போய் இழுத்து வருகிறேன்" என்றபொழுது கிழவியாக இருந்த பார்வதி, "ஒரு பாவமும் செய்யாதவர் யாரோ அவர்தாம் அவரை மீட்க முடியும், மற்றவரால் முடியாது" என்றாள். அதைக் கேட்டவர் தாம் செய்த பாவங்களை எண்ணிச் சும்மா இருந்து விட்டார். இப்படியே வேறு சிலரும் வந்து கிழவி சொன்னதைக் கேட்டுப் பிரமித்து நின்றுவிட்டாாகள்,

அப்போது பலசாலியான ஒருவன் வந்தான். தான் கிழவரை மீட்டு வருவதாகச் சொன்னான். அவனிடமும் "ஒரு பாவமும் செய்யாதவர்களே அவரை மீட்க முடியும்" என்றாள். அவன் "அப்படியா? இப்போதுதான் புராணம் வாசித்தவர் சொன்னார், கங்கையில் மூழ்கினால் எல்லாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/29&oldid=1302128" இலிருந்து மீள்விக்கப்பட்டது