இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீன தேசத்தில் முதல் முதலாக முகம் பார்க்கும் கண்ணாடி வந்த போது அதை மிகவும் சில பேர்களே வாங்கி வைத்துக் கொண்டார்கள். பெரிய பணக்காரர்கள் அதை வாங்கி மறைவாக வைத்துக் கொண்டு, அவ்வப்போது தம்முடைய முகத்தை அதில் பார்த்துக் கொண்டார்கள்.