இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒரு கிழவி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள். காக்கை ஒன்று அவள் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு வடையைக் கொத்திக் கொண்டு பறந்து போய் விட்டது.
அந்தக் காக்கை ஒரு மரத்தில் அமர்ந்து வடையை வாயில் பற்றிக் கொண்டு தின்னத் தொடங்கியது. அப்போது ஒரு நரி அங்கே வந்தது. அந்தக் காக்கையினிடமிருந்து அந்த வடையைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று அது எண்ணியது.