இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காளி கோயிலுக்கு முன்னால் ஓர் ஆடும் ஒரு மாடும் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடு மாட்டைப் பார்த்தது. மாடு ஆட்டைப் பார்த்தது. ஆடு மாட்டின் வாலைப் பார்த்து, "இதற்கு வால் எவ்வளவு அழகாய் இருக்கிறது! நுனியில் குஞ்சம் கட்டினது போலல்லவா இருக்கிறது!" என்று வியந்தது. மாடோ ஆட்டின் வாலைப் பார்த்து, "எவ்வளவு அழகாக, சின்னதாக இருக்கிறது; நமக்குத்தான் எவ்வளவு நீளமான வால்?" என்று