இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை
கதைகள் கேட்பதற்குக் குழந்தைகள் விரும்புவர். அவர்கள் சுவைக்கும்படி கதை சொல்லப் பழங்காலத்தில் பாட்டிகள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் தொணதொணப்புக்கு ஈடு கொடுக்க தினசரி கதைகளை "இட்டுக்கட்டி"ச் சொல்வது வழக்கமாக இருந்தது.
அப்படி "இட்டுக்கட்டி"ச் சொல்லப்பட்ட கதைகள்தாம் செவிவழியே தொடர்ந்து நாடோடிக் கதைகள் ஆயின.
அந்த நாடோடிக் கதைகளைத் தழுவி முன்னர் "நாலு பழங்கள்", "நல்ல பிள்ளையார்" ஆகிய இரு புத்தகங்களை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து மூன்றாவதாகத் "தேன் பாகு" என்னும் இந்த நூலை வெளியிடுகிறோம். பொது மக்கள் ஆதரவு அளித்து உதவ வேண்டுகிறோம்.
அமுத நிலையத்தார்