பக்கம்:தேன்பாகு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


தும் அவனுக்குத் தான் உண்டது கொழுக்கட்டை என்று நினைவு வந்தது. உடனே, "ஆமாண்டி, அந்தக் கொழுக்கட்டையைத்தான் சொல்ல வங்தேன். அது மறந்து போய், யாரோ ஒருவன் வழியில் சொன்ன அ த் தி ரி ம க் கு என்ற வார்த்தையைப் பிடித்துக்கொண்டேன். தெரியாமல் அடித்துவிட்டேன்" என்று அவளைத் தடவிக்கொடுத்தான். அன்று அவனுக்குக் கொழுக்கட்டை கிடைத்தது. ஆனால் அவள் உடலில் ஏற்பட்ட கொழுக்கட்டை போன்ற வீக்கம் ஆற சில நாள் ஆயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/50&oldid=1340028" இலிருந்து மீள்விக்கப்பட்டது