இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
வந்து என்னை அழைத்துக்கொண்டு போய்க் கல்யாணம் செய்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். மறுபடியும் வருவார்" என்றாள்.
"அப்படியா! மிகவும் சந்தோஷம். உனக்கு ஏற்றபடி ராஜகுமாரனே கிடைத்திருக்கிறான். நீ அவனை மணந்து கொண்டு செளக்கியமாக இரம்மா!" என்று சொல்லும்போதே அவன் கண்களில் ஆனந்த பாஷ்யம் துளிர்த்தது.
பிறகு கனகவல்லிக்கும் "அரசகுமாரனுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!அவள் கனவு பலித்தது.