பக்கம்:தேன்பாகு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


அவன், "நேற்றுத்தான் ஒரு பிஞ்சு விடாமல் பறித்துக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று விட்டு வந்தேன்" என்று ஒரு பொய்யை எடுத்து விட்டான்.

"இருக்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லி வைத்தியர் போய்விட்டார்.

மட்டியப்பனுக்கு அப்போது ஒரு யோசனை உண்டாயிற்று; 'இப்போதைக்கு ஒரு பொய்யைச் சொல்லி அனுப்பிவிட்டோம். நாளைக்கு வந்தால் என்ன செய்வது?' என்று எண்ணி மிகவும் கவலைப்படலானான். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த வாரம் வைத்தியர் அவனிடம் வந்து கத்தரிக்காய் கேட்டார். மட்டியப்பன் ஒரு பதிலை முன்பே யோரித்து வைத்திருந்தான். அவன் தன் தலையைச் சொறிந்து கொண்டே, "நான் சொல்லுகிறேன் என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. அன்றைக்கே நான் விஷயத்தைச் சொல்லியிருப்பேன். எங்கள் வீட்டுக் கத்தரிக்காயை இந்த ஊராருக்குக் கொடுக்கக்கூடாது" என்றான்.

வைத்தியர் ஆச்சர்யம் அடைந்தவராய் "என்ன காரணம்?"என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/61&oldid=1341954" இலிருந்து மீள்விக்கப்பட்டது