பக்கம்:தேன்மழை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் நீர்


தமிழ்மொழிக் குதவும் செல்வம்

தானாக வளர்தல் போலும்

கமழ்நறு மணத்தைப் பூக்கள்

கருவிலே பெற்றாற் போலும்

இமிழ்கடல் வயிற்றின் வெள்ளம்

இயற்கையாய்ப் பெருகும். வானின்

அமிழ்தமாம் மழைநீர்க் கெல்லாம்

அடிப்படை கடல்நீர் அன்றோ?


அலைவளர் கடலே ஆழம்

அலைகளே அதன்கைத் தாளம்

கலம்பகக் கடலின் செல்வம்

கைவிரல் தொகைபோல் ஐந்தே

மலைபடு பொருள்கள் யாவும்

மலர்போன்று மணத்தை வீசும்

ஒலிகடல் வழங்கும் செல்வம்

ஓங்கிய ஒளியை வீசும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/15&oldid=495560" இலிருந்து மீள்விக்கப்பட்டது