இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதாவின் தேன்மழை
16
கிளம்பிற்றுக் கப்பல், வீரர்
கிளம்பினர்; அவர்க ளோடே
இளம்பெரு வழுதி சென்றான்.
என்னானான்? உலகின் வீரம்
அளந்தவன் கடலுள் மாய்ந்தான்!
அனைவரும் வெறுங்கூ டானார்
விளம்பரக் கடலின் கோபம்
விட்டதோ முச்சங் கத்தை!
பொடிமணல் உலகைச் சூழ்ந்த
போர்க்கடல்; மாந்தர் தம்மை
வடிந்திடா நீரி னாலே
வஞ்சிக்கும்; அதுபோல் வண்ணக்
கொடிநமை வஞ்சிக் காது
கொல்லாதென் றறிந்தும்; நாமோ
கொடியினை யன்றோ வஞ்சிக்
கொடியென்று கூறு கின்றோம்!