பக்கம்:தேன் சிட்டு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குழலோசை


மார்கழித் திங்களில் அதிகாலையில் பூவின்மேல் பனி விழுகின்ற அரவத்தைக் கேட்டிருக்கிறீர்களா? உருவமில்லாத பனித்திவலை காற்று வெளியிலே மிதந்து வந்து இதழ் அவிழ்ந்து கொண்டிருக்கும் பூவின்மேலே படிந்து மெல்ல மெல்ல முத்துச் சொட்டாக உருவங்கொள்ளும் ஆச்சரியத்தைக் கண்டு களிக்க நான் கழனிகளினூடே நடந்து கொண் டிருந்தேன்.

கிழக்கு மங்கலாக வெளுத்திருக்கிறது. பரிதியின் ஒளி தோன்றப் போகிறது என்பதற்கு அறிகுறியாக இப்பொழுதுதான் அடிவானத்திலே ஒன்றிரண்டு வெள்ளை ரேகைகள் படர்ந்திருக்கின்றன. மார்கழி இறுதி வாரத்திலே ஒரு நாள்.

விரிந்த மலரின் இதழ்களின் மேலே பனி விழு கிறது. அரவமில்லாத அரவமொன்று தொனிக்கிறது. பனி மிதந்து வருகிறது; இதழ்கள் அதை ஏந்துகின்றன. மலரின் உள்ளத்திலே கிளர்ந்த அழகும் இன்பமும் மேலே பொங்குவது போலப் பனிநீர் மலர் இதழ்களிலே வடிவங் கொள்ளுகிறது. நெஞ்சிலே காதல் அரும்புவது போலே, விண்ணிலிருந்து கருணை வெள்ளம் இழிவது போலே.

உருவில்லாத நுண்ணிய திவலைகளாகக் காற் றிலே மிதந்து வந்து இதழ்களிலே படிந்த பனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/39&oldid=1395334" இலிருந்து மீள்விக்கப்பட்டது