பக்கம்:தேன் சிட்டு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிக்கோள்

67


வீற்றிருப்பதுபோலவே அவன் எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும், எங்கும் இருக்கிறான்.

ஆகவே அவனுக்குச் செய்கின்ற தலைசிறந்த பூசை அவனுடைய வடிவங்களாக விளங்கும் உயிர் களிடத்தும், மற்றப் பொருள்களிடத்தும் அன்பு கொள்ளுவதேயாகும். 'ஆருயிர்க்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்' என்று இராமலிங்க வள்ளலார் பாடியதும், மண்ணாங்கட்டி ஒன்றின் வடிவம் குலைந்தபோது அவர் அதற்காக வருந்தியதும் இந்த உண்மையை உணர்ந்துதான்.

எல்லா உயிர்களிலும், எங்கும் இறைவன் இருக்கிறான் என்பதை மெய்ப்பிக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். என்னால் முடியாது; நிச்சயமாக முடியாது. ஆனால் என்னால் சாதிக்க முடியாதன வெல்லாம் பொய்யென்று போய்விடா.

எனக்கு இதை மெய்ப்பிக்க வேண்டும் என்ற கவலையும் இல்லை. விவேகாநந்தரைப்போல ஒருவர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்ற மெய்யான ஆவலால் உந்தப்பட்டு இந்தக் கேள்வியைக் கேட்டால் இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போன்ற தகுதி வாய்ந்த ஒருவர் இதற்குத் தெளிவான பதிலைக் கொடுக்க அங்கே இருப்பார். அதில் எனக்கு ஐயம் இல்லை. சான்றோர்கள் கூறியுள்ள உறுதி மொழி எனக்குப் போதும்.

'பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி' என்ற வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. 'ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்று பாடியவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/68&oldid=1155065" இலிருந்து மீள்விக்கப்பட்டது