பக்கம்:தைத் திங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

131


ளுடைய இந்தப் பெயர்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. ஜூலியஸ் சீசரின் பெயரில் ஜூலை என்னும் மாதப் பெயரும், 'அகஸ்டஸ்' என்ற மன்னன் பெயரில் ஆகஸ்ட் என்ற மாதப் பெயரும் இடையிலே புகுந்தன.

இவ்வாறு பல மாறுதல்கள் பெற்ற பன்னிரண்டு மாதங்களுடன் ஆண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜூலியஸ் சீசரின் சீர்திருத்த நாள்காட்டி (காலண்டர்) பதினெட்டாம் நூற்றாண்டிற்கு மேலும் பின்பற்றப் பட்டு வந்தது. இந்நிலையில், 'கிரி கிரி' என்னும் பதின்மூன்றாம் போப் ஆண்டவர் பழைய நாள் காட்டியில் சிற்சில மாறுதல்கள் செய்து புதியதொரு நாள் காட்டியை உருவாக்கினார். அது 1852-ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்குக் 'கிரிகிரி காலண்டர்'என்னும் பெயர் வழங்கப்படுகிறது. இப்போது உலகம் முழுவதும் பின்பற்றி வருவது இந்தக் கிரி கிரி நாட்குறிப்பே. சில இடங்களில் மட்டும் சிறிது வேறுபட்ட கிரேக்க முறை பின்பற்றப் பட்டுவருகிறது. கி, பி. 525-ஆம் ஆண்டிலிருந்து சனவரி முதல் நாளைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடச் செய்த பெருமை 'டையோனிசியஸ்' என்னும் கிறித்துவ சமய ஆசானுக்கு உரியதாகும்.

இன்றுள்ள உலக நாள்காட்டியின் வரலாற்றை ஆராயுமிடத்து, திங்கள் - ஆண்டு அமைப்பும் புத்தாண்டுப் பிறப்பும் இடத்துக்கு இடம்-காலத்துக்குக் காலம் மாறுவது இயற்கை என்னும் பேருண்மை விளங்கும். இப்பொழுதுள்ள உலக நாள்காட்டியிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/148&oldid=1321864" இலிருந்து மீள்விக்கப்பட்டது