புலவர் சுந்தர சண்முகனார்
19
பல இடங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது. சங்க நூல்களில் உள்ள ஆட்சியைக் கொண்டு, இந்தத் திங்களுக்குத் 'தை' என்னும் பெயர் வைக்கப்பட்டதற்கு உரிய காரணத்தை உய்த்துணர முடிகிறது.
தைத் திங்களில் செய்யப்படும் அணி-அலங்காரம் முன்பு கூறப்பட்டது. தைத் திங்கள் என்பது அணி மிக்க-அலங்காரமான திங்கள் என்று அறியலாம். 'தை' என்னும் சொல்லுக்கு, அணி செய்தல் அலங்காரம் செய்தல்-அழகு செய்தல்-ஒப்பனை செய்தல் என்று பொருளாம். அதனாலேயே, அணி செய்யப்பெறும் இந்தத் திங்கள் 'தைத்திங்கள்' என்னும் அலங்காரப் பெயரால் வழங்கப்பெறுகிறது. அணி செய்தல் என்னும் பொருளில் 'தை' என்னும் சொல் சங்க நூல்களில் ஆளப்பட்டிருப்பதைப் பரக்கக் காணலாம். சில ஆட்சிகள் வருமாறு:-
புறநானூறு:
'சென்னி பொலியத் தைஇ’ (126)
'கண்ணி இலங்கத் தைஇ’ (353)
வல்லோன் தைஇய வரிவனப் புற்ற' (33)
'அடிபொலியக் கழல் தைஇய '(40)
"செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ’(243)
பதிற்றுப்பத்து:
'அவிரிழை தைஇ மின்னுமிழ்பு இலங்கச் சீர்மிகு முத்தம் தைஇய
......' (39)
பரிபாடல்:
'தண்கமழ் சாந்தம் தைஇ வளியும்'(21)