பக்கம்:தைத் திங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தைத் திங்கள்

இந்திர விழா:

வேண்டாத பழம் பொருள்களுடன் துயர்களும் போகுவது போகி என்பதாக 'போகி' என்னும் சொல்லுக்கு ஒருவகைப் பொருள் கூறுவர் சிலர். 'போகி' என்பது இந்திரன் பெயர்களுள் ஒன்று; எனவே இந்திரனுக்குச் செய்யும் விழாவே 'போகி பண்டிகை' எனப்படும் போகி விழாவாகும்-எனக் கூறுவர் மற்றொரு சாரார். இந்திரன் மழை பெய்ய வைப்பவன் ஆதலின் மழையினால் விளைந்த அறுவடை வீடுவந்து சேர்ந்தபின் நன்றிக் கடனாக அவனுக்கு விழா எடுக்கப்படுவதாகச் சொல்லப் படுகிறது.

இந்திர விழா தமிழர்க்குப் புதிதன்று. சிலப்பதிகாரத்தில் 'இந்திர விழவூர் எடுத்த காதை' எனவும், மணிமேகலையில் '(இந்திர) விழாவறை காதை' எனவும், தனிக் காதைகளே உள்ளன. இந்தக் காதைகளில் இந்திர விழா மிகவும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழர்கள் போகி நாளில் இந்திரனை வழிபட்டிருப்பதில் வியப்பில்லை.

இந்தப் போகி விழாவிற்கு ஒரு கதை சொல்லப் படுகிறது. வடநாட்டில் ஆயர்கள் மழைத்தெய்வமாகிய இந்திரனைப் புறக்கணித்துக் கண்ணனுக்குப் பூசனை செய்தார்களாம். அதனால் சினந்த இந்திரன். கண்ணன் பூசனை நடைபெறாதவாறு பெருமழை பெய்யச் செய்தானாம். அப்போது ஆயர்களின் வேண்டுகோளின்படி கண்ணன் கோவர்த்தன மலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/47&oldid=1328019" இலிருந்து மீள்விக்கப்பட்டது