இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50 தைத் திங்கள்
பலர் மாட்டுப் பொங்கல் அன்றைக்கே புத்தாடைகளை வைத்துப் படைத்து உடுத்துவர். உணவு கொண்டதும், குடும்பத் தலைவர்-குடும்பத்தில் பெரியவர், மற்றவர்க்கு ஆடை அளிப்பார். மற்றவர் அவர் காலில் விழுந்து வணங்கி ஆடையைப் பெற்று உடுத்துக் கொள்வர். சில குடும்பங்களில் படைத்ததும் புத்தாடை உடுத்திய பின்னரே உணவு கொள்வர்.
இவ்வாறாக மாட்டுப் பொங்கல் விழா மிகவும் சிறப்புடன் நடைபெறும்.