இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தைப்பாவாய்
9
வாழப் பிறந்ததும் தழிழே!
வையக் கலைகள் அணைத்தும் பூண்டு- (வாழப்...)
ஏழாம் இசையும் இயலும் கூத்தும்
இணைய இழைய ஏற்றுச் சேர்த்து
ஆழக் கடலின் முழக்கத் தோடு
ஆர்த்து ஆர்த்து ஆர்த்து நீடு- (வாழப்)
நீதி தந்ததும் தமிழே!
நிகரும் எதிரு மில்லாக குறளின் -(நீதி...)
காதல் அகமும் வீரப் புறமும்
கற்புக் கனலின சிலம்புத் திறமும்
மாதர் ஏத்தும் மணியின் அறமும்
வழங்கி வழங்கி வழங்கி நிறைய -(நீதி...)