பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

9




ஆளப்பிறந்தது தமிழே!


வாழப் பிறந்ததும் தழிழே!
வையக் கலைகள் அணைத்தும் பூண்டு- (வாழப்...)

ஏழாம் இசையும் இயலும் கூத்தும்
இணைய இழைய ஏற்றுச் சேர்த்து
ஆழக் கடலின் முழக்கத் தோடு
ஆர்த்து ஆர்த்து ஆர்த்து நீடு- (வாழப்)

நீதி தந்ததும் தமிழே!
நிகரும் எதிரு மில்லாக குறளின் -(நீதி...)

காதல் அகமும் வீரப் புறமும்
கற்புக் கனலின சிலம்புத் திறமும்
மாதர் ஏத்தும் மணியின் அறமும்
வழங்கி வழங்கி வழங்கி நிறைய -(நீதி...)