பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வ.கோ. சண்முகம்


ஒருமையெனும் நெருப்பவித்து
உடற்பசியைத் தவிர்த்திடுமோர்
அருவிருந்தாய்இனிப் பூட்டி
அமைதி தருவதெது ? - புவியில்
ஒருவன ஒருத்தியுடன் - அன்பால்
ஒன்றும் திருமணமே!

நல்லறமாய்; உலகுய்ய
நலம்விளையும் கழனியதாய்
தொல்மறை யாம்தமிழ்க் குறளும்
சொல்லிப் புகழ்ந்ததெது? - உயர்வாம்
இல்லறமே எனவிளக்கும் - இளமை
இனபத் திருமணமே!