இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36
வ.கோ. சண்முகம்
அவன்: | நேத்துப் பாத்தக் கூத்து வந்து |
நெஞ்சு முழுக்க நிக்குது! | |
ராத்திரி முழுசும் நாமும் அந்த | |
'ராசா - ராணியா' ஆவணும்! | |
அவள்: | மீசைக் கார மருதை மச்சான் |
மிஞ்சிப்போவுது காரியம்! | |
ஆசை ஏறி நீயும் ஒடம்பு | |
அவலு அவலா இடியறே! | |
தலைக்கு நல்ல எண்ண தேச்சுத் | |
தளத ளக்கக் குளிச்சிட்டேன்! | |
பொளைச்சிக் கிடந்தா நாளை ராவுக் | |
பூவை பூச்சி மிதிக்கலாம்! | |
அவன்: | பணத்தைக் காச மாத்திக் கொடுத்து |
பாசம் வாங்க முடியுமா ? | |
கிணத்துத் தண்ணிக் கணக்கா நீயும் | |
கிடக்கக் கவலை ஏனடி? | |
பூவுத் தும்ப நெலவு கீளே | |
பூத்த மொகத்தைக் காட்டிகிட்டு | |
நோவு தீர நூறு முத்தம் | |
நொங்கு போலக் கொடுத்திடு! |