பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வ. கோ. சண்முகம்

அதுவும் சரிதான்!
ஏன் என்றால்
நீ எப்போதுமே
அவலக் கண்ணீரின்
ஆசைத் தோழி!
வெப்பமூச்சுகளின்
அந்தரங்க உபகாரி!

நீ,
தத்துவங்களின்
பாடிவீடு!
நழுவிக் கொண்டவர்களின்
மாடிவிடு!

நீ-
சுயரூபி அல்ல!
சாகும் வரை இருக்கும்.
சலித்து அலுத்துப் போகும்.
ஒற்றை ஒரு
உருவினளாகவே
இல்லாத
‘இஷ்ட ரூபி!’ இது -
நீ பெற்ற
ஈடு இணையற்ற மகாவரம்!

இந்த வரம்
அமர வர்கத்தினர்
தெய்வ வீடுகளில்