பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தற்சமயம் திருப்பதியில் வாழ்பவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை ஆராய்ச்சி செய்து நம்மாழ்வார் தத்துவத்தை ஆங்கில ஆராய்ச்சி நூலாக வடித்துத் தந்து ‘டாக்டர் (Ph.D.) பட்டம் பெற்றவர். குடும்பத்துடன் திவ்விய தேச யாத்திரை செய்து தாம் அநுபவித்த இன்பப் பேற்றைப் பிறரும் பெற்று அநுபவிக்கவேண்டும் என்னும் எண்ணத்தின் விளைவாக இந்நூலையும் இதற்கு முன்னர் வெளிவந்த ‘மலைநாட்டுத் திருப்பதிகள்’ என்னும் நூலையும் ஆக்கித் தந்திருக்கிறார்கள். மேலும், தாம் சென்று வந்த ஏனைய திவ்விய தேசங்கட்கும் இதுபோலவே தாம் படைக்கும் நூலின் வாயிலாக நம்மையும் மானசீக யாத்திரையில் உட்படுத்தித் தம்முடன் அழைத்துச் செல்வார் என்பதில் ஐயமில்லை.

இந்நூல் மலிவானநல்ல அச்சில் வெளியிடப் பெற்றுள்ளது. இதனை மனமுவந்து ஏற்று வெளியிட்டவர்கட்கும் என்பாராட்டு. இதனை எல்லோரும் வாங்கிக் கற்று, மற்றவர்கட்கும் கற்பித்து எம்பெருமான் திருவருள்பெற்று, இன்புற வாழ வேண்டுமென வாழ்த்துகின்றேன். வாழ்க ‘தொண்டை நாட்டுத் திருப்பதிகள்’ வளர்க இந்நூலாசிரியரின் சமயம் கலந்த தமிழ்த் தொண்டு!!

- கிருஷ்ணசாமி ரெட்டி

vii