பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்றவூர் நித்திலம் 111

குறிப்பிடும் தன்னை என்னாக்கும்’ எம்பெருமானின் தடங் கருணைத் திறத்தினை வியந்து போற்றுகின்றோம்

திருமங்கையாழ்வார் இத்திருப்பதிக்கு வந்ததாகச் கருது வோரும் உண்டு. ‘'ஆழ்வார் எவ்வுள் கிடந்தானைச் சேவித்த பின்பு திருவல்லிக்கேணிக்கு எழுந்தருள்வதற்கு முன்னே திருநின்றவூரைச் சேர்ந்தார்; அத்திருப்பதியில் எழுந்தருளியுள்ள பத்தராவிப் பெருமாள் அப்பொழுது ஆழ்வாருக்கு முகங்கொடாமல் பிராட்டியாரோடு ஸரஸ் சல்லாபம் செய்து கொண்டு பராமுகமாக இருந்திடவே, ஆழ்வார் அத்திருப்பதியை விட்டு அப்பால் சென்று திருவல்லிக்கேணியையும் திருநீர்மலை யையும் சேவித்து, அதன்பின்னர் திருக்கடல் மல்லையை யடைந்து அத்தலத்துப் பெருமானைச் சேவித்து நிற்கும் பொழுது, திருநின்றவூர் எம்பெருமான் திருமகளால் தூண்டப்பட்டு இவ்வாழ்வார் திருவாக்கினால் பாடல்பெற்றுச் சிறப்புறக் கருதிக் கடல் மல்லையில்வந்து சேவை சாதிக்க, இப்போது ‘நின்றவூர் நித்திலத்தைக்... கண்டது நான் கடல் மல்லைத் தலசயனத்தே’ என்று திருநின்றவூர்ப் பத்தராவிப் பெருமானையும் இங்கே சேவிக்கப்பெற்றதாக அருளிச்செய் கினறாரென்று பெரியோர்களின் நிர்வாகம்’ என்று குறிப்பிடுவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள். நம் ஆராய்ச்சியை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு எப்படி எப்படியெல்லாம் பக்தர்கள் அர்ச்சாவதார மூர்த்திகளை அநுபவித்துள்ளார்கள் என்று வியப்பு அடைகின்றோம். அதே சமயத்தில் ‘நம்மால் அந்த அளவுக்கு அநுபவிக்க முடிய வில்லையே’ என்ற கழிவிரக்கமும் கொள்ளுகின்றோம்.

இனி, நின்றவூர் எம்பெருமானைக் குறிப்பிடும் ஆழ்வார் பாசுரங்கள் இரண்டையும் ஈண்டுச் சிந்திக்கின்றோம். தலசயனப் பெருமாள் மீதுள்ள பாசுரம்:

‘பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப்

பொய்ந்நூலே மெய்ந்நூலென்று என்றும் ஓதி மாண்டு, அவத்தம் போகாதே வம்மின்: எந்தை;

என்வணங்கப் படுவானை, கணங்கள் ஏத்தும் நீண்டவத்தை; கருமுகிலை எம்மான் தன்னை;

நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர் சோலைக்

11. மேலது. 7.9:7. 12. பெரி. திரு. 2.5:2 ('திவ்வியார்த்த தீபிகை'காண்க.)