பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

நோக்கி வருங்கால் இருட்டி விடுகின்றது. நின்றவூருக்கு அருகிலுள்ள ஒரு சிற்றுாரில் ஒரு சத்திரத்தில் தங்குகின்றார் கவிஞர். அன்றிரவு உறக்கம் சரியாக வரவில்லை. அங்குள்ளவர்களிடம் பேச்சு கொடுக்கின்றார்; இடையில் தன் கவலையையும் சொல்லுகின்றார். அவர்கள் காளத்திவாணரின் கொடைத் தன்மையைப் பலபடப் புகழ்ந்து பேசுகின்றனர்; அவ்வள்ளல் கவிதைகளைச் சுவைக்கும் திறத்தையும் பாராட்டிப் புகழ் கின்றனர். மறுநாள் அவ்வள்ளலைக் கண்டுவிட்டால் தம் வறுமைக்கு ஒரு ‘செண்ட் ஆஃப் தந்து விடலாமே என்று கருதுகின்றார் புலவர். நீண்டநாளாகத்தன்னோடு பிறந்து வளர்ந்த வறுமையைப் பிரிய மனமும் இல்லை. தம்மிடம் இந்த ஒரு நாளாவது இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பரிவுடன் நினைக்கின்றார் கவிஞர். இந்தப் பரிவு ஒரு பாட்டு வடிவங்கொள்ளுகின்றது.

“தீளத்திரிந்(து) உழல்கின்றாய் நீங்கா நிழல்போல நாளைக்கு இருப்பாயோ? நல்குரவே! - காளத்தி நின்றைக்கே சென்றக்கால் நீளங்கே? நான் எங்கே? இன்றைக்கே சற்றே இரு’ (உழல்தல்-அலைதல்: நல்குரவு-வறுமை: நின்றை-நின்றவூர்) என்பது அப்பாடல்.இப்பாடலை நினைந்து சுவைத்துக் கொண்டே இருப்பூர்தி நிலையத்தை நோக்கி நடை கட்டுகின்றோம்.

4.


+:

+3.

18. தனிப்பாடல் திரட்டு 1: பாடல் 866 : (கழகப் பதிப்பு.)