பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

‘தொண்டை நாட்டுத் திருப்பதிகள்’ என்ற இந்த நூலில் தொண்டை நாட்டுத் திருப்பதிகள் 22-ஆம், நடு நாட்டுத் திருப்பதிகள் 2-ஆம் அடங்கியுள்ளன. இவற்றை ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று எம்பெருமானின் அவதாரப் பெருமையையும் மகிமையையும் நெஞ்சுருகி அநுபவித்து எழுதியுள்ளார்கள். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நேராக் கோடு படிப்பவர் அனைவருக்கும் அந்தந்த திருப்பதிகளில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நேரில் சேவித்த பரவசத்தை ஏற்படுத்தும் பான்மையில் நூல் அமைந்துள்ளது. இப்பரவசம் நூலைப் படிப்போர் சிந்தையிலும் ஏற்படுத்தும் என்பது என் நம்பிக்கை.

ஆழ்வார் பாசுரங்களில் உள்ளம் உருகி உருகி அநுபவித்து ஆனந்த பரவசம் அடைந்த ஆசிரியர் ஒவ்வொரு திருப்பதியின் பெருமாளின் அவதாரப் பெருமையைக் கூறுவதோடு அடியார்களை தரிசிக்க ஏதுவாக வழித்தடங்களையும் சொல்லிக் கொண்டே செல்வது நாமும் அவருடன் செல்லும் ஒர் உன்னத உணர்வை அடையச் செய்கின்றது. ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் இந்நூலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிட எம்பெருமான் அருள்பாலித்துள்ள மையை எண்ணி எண்ணி மகிழ்வுறுகின்றோம்.

ஆர். தேவகி.

xii